பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமி

 

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமி

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமி

நேற்று இரவு 11 மணியளவில் டெல்லி காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர், பிரதமர் மோடியை கொலை செய்யப்போவதாக மிரட்டினார். இதனையடுத்து தொலைப்பேசி எண்ணை கண்டுபிடித்து, விசாரணையில் ஈடுபட்ட போலீசார், வடகிழக்கு டெல்லியில் உள்ள கஜூரி காஸ் பகுதியிலிருந்து அந்த நபர் பேசியதை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் பெயர் அர்மான் என்பது தெரியவந்தது. போதைக்கு அடிமையான அர்மான், தனது தந்தையிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து போலீஸ்க்கு போன் செய்தது தெரியவந்தது. தான் சிறைக்கு செல்ல ஆசைப்பட்டே பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.