டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி – கொரோனா பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பு
டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதுடன் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததன் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன் முடிவுகளுக்காக மருத்துவர்கள் காத்திருக்கின்றனர். மேலும் சத்யேந்தர் ஜெயின் தொடர்ந்து ஆக்ஸிஜன் ஆதரவில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்.
Due to high grade fever and a sudden drop of my oxygen levels last night I have been admitted to RGSSH. Will keep everyone updated
— Satyendar Jain (@SatyendarJain) June 16, 2020
டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர் குறித்து தனது ட்விட்டர் பதிவில் “நீங்கள் மக்களுக்காக அயராது உழைத்துள்ளீர்கள். இப்போது உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.