டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதுடன்  மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததன் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர் குறித்து தனது ட்விட்டர் பதிவில் “நீங்கள் மக்களுக்காக அயராது உழைத்துள்ளீர்கள். இப்போது உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதலில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் சத்யேந்திர ஜெயினுக்கு தொற்று இல்லை என முடிவு வந்தது. இந்த நிலையில் இரண்டாவது பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் மற்றும் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் சத்யேந்திர ஜெயினும் பங்கேற்றிருந்தார்.