டெல்லியில் ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா!

 

டெல்லியில் ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா!

டெல்லியில் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று தற்போது இரட்டிப்பு வீதமாக பரவி வருகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் ஜூலை 31-ஆம் தேதிக்குள் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.5 லட்சம் பேராக இருக்கும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.

டெல்லியில் ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா!

இந்நிலையில் டெல்லியில் இன்று ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் இன்று மட்டும் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59,746 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,175 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 18,105 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தமாக 3,70,014 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 33,013 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.