வழிந்தோடிடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கிய சதைகளுமாக -பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வழக்கு -பெண்கள் உரிமை ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ்..

 

வழிந்தோடிடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கிய சதைகளுமாக -பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வழக்கு -பெண்கள் உரிமை ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ்..

மேற்கு டெல்லியில் இரண்டு நாட்களுக்கு(ஆகஸ்ட்- 4) முன்பு 12 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் (டி.சி.டபிள்யூ) வியாழக்கிழமை டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

வழிந்தோடிடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கிய சதைகளுமாக -பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வழக்கு -பெண்கள் உரிமை ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ்..
இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு கூலி வேலை செய்யும் பெற்றோர்கள் வேலைக்கு சென்றபோது, அவர்களின் மகளான 12 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது, யாரோ ஒரு நபர் வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு போய் விட்டார் .இந்நிலையில் சிறுமி வீட்டின் பால்கனியில் வழிந்து ஓடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கும் சதையுமாக கிடந்தார் .அப்போது அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் அந்த சிறுமியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .சிறுமி இருக்கும் நிலையினை பார்த்த டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர் .பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அந்த சிறுமியை ஹாஸ்ப்பிட்டலில் வந்து பார்த்து ,கூலிதொழிலாளர்களான அவரின் பெற்றோருக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கினார் .இந்நிலையில் இந்த பலாத்காரம் தொடர்பாக டெல்லி போலீசார் ஒரு தொழிலாளியை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளார்கள் .
ஆனால் இப்போது டெல்லி மகளிர் ஆணையம், இந்த பலாத்காரம் தொடர்பாக ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி,விளக்கம் அளிக்குமாறு டெல்லி போலிஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டி.சி.டபிள்யூ தலைவர் சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார் .போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள்