நான் விவசாயிகளை ஆதரிப்பதால் மோடி அரசு எனக்கு பிரச்சினைகளை உருவாக்குகிறது.. அரவிந்த் கெஜ்ரிவால்

 

நான் விவசாயிகளை ஆதரிப்பதால் மோடி அரசு எனக்கு பிரச்சினைகளை உருவாக்குகிறது.. அரவிந்த் கெஜ்ரிவால்

நான் விவசாயிகளை ஆதரிப்பதால் மோடி அரசு எனக்கு பிரச்சினைகளை உருவாக்குகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பல எல்லைகளில் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பஞ்சாபில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: விவசாயிகள் இயக்கத்தில் (போராட்டம்) ஆரம்பம் முதல் நான் சம்பந்தப்பட்டுள்ளதால், மோடி அரசு எனக்கு பிரச்சினைகளை உருவாக்குகிறது.

நான் விவசாயிகளை ஆதரிப்பதால் மோடி அரசு எனக்கு பிரச்சினைகளை உருவாக்குகிறது.. அரவிந்த் கெஜ்ரிவால்
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

விவசாயிகளின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யக்கோரி நான் மோடி அரசுக்கு கடிதம் எழுதினேன். இதனால் மோடி அரசு மிகவும் கோபம் அடைந்தது. கடந்த வாரம் டெல்லியில் உள்ள அனைத்து அதிகாரங்களும் துணைநிலை கவர்னருக்கு சொந்தமானது முதல்வருக்கு அல்ல என்று ஒரு மசோதாவை கொண்டு வந்தது. அவர்கள் எல்லா அதிகாரத்தையும் பறிக்க விரும்புகிறார்கள் இதனால் அடுத்த முறை சிறைகளை உருவாக்குவதற்கான கோப்பு துணை நிலை கவர்னருக்கு செல்லும்.

நான் விவசாயிகளை ஆதரிப்பதால் மோடி அரசு எனக்கு பிரச்சினைகளை உருவாக்குகிறது.. அரவிந்த் கெஜ்ரிவால்
பிரதமர் மோடி

மோடி அரசாங்கத்தை எதிர்த்து போராடுவது எப்படி என்பது எனக்கு தெரியும். நான் டெல்லியில் இருக்கும் வரை விவசாயிகள் கவலைப்படக் கூடாது. விவசாயிகள் இயக்கத்தை இழிவுபடுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆம் ஆத்மி கட்சியை துஷ்பிரயோகம் செய்த அனைத்து பா.ஜ.க. மக்கள் மீதும் நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.