“அவளை மறந்துடு இல்லேன்னா இறந்துடு” -தங்கையின் தோழனுக்கு நேர்ந்த கதி

 

“அவளை மறந்துடு இல்லேன்னா இறந்துடு” -தங்கையின் தோழனுக்கு நேர்ந்த கதி

தன் தங்கையோடு நட்போடு பழகியவரை ,காதலிப்பதாக நினைத்து அவரின் சகோதர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

“அவளை மறந்துடு இல்லேன்னா இறந்துடு” -தங்கையின் தோழனுக்கு நேர்ந்த கதி

டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் இரணடாம் ஆண்டு படிக்கும் மாணவர் ராகுல்.இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணோடு நட்போடு பழகியுள்ளார் .ஆனால் அவரின் சகோதரர்களுக்கு அவர்களிருவரும் காதலிப்பதாக நினைத்தார்கள் .இதனால் அவர்கள் ராகுலிடம் பலமுறை அவளோடு சுத்தாதே ,அவளை மறந்து விடு இல்லேன்னா கொலை செய்து விடுவோமென்று மிரட்டினார்கள் .அப்போதெல்லாம் ராகுல் அவர்களிடம் தான் தங்களின் தங்கையோட நட்போடுதான் பழகி வருவதாகவும்,தங்களுக்குள் காதலும் இல்லை கத்தரிக்காயுமில்லை என்று கூறியுள்ளார் .பிறகு மீண்டும் அவரோடு சாட் செய்வதும் ஒன்றாக ஊர் சுற்றுவதுமாக இருந்துள்ளார் .
இதனால் கோபமுற்ற அந்த பெண்ணின் சகோதர்கள் ராகுலை டெல்லியின் நந்தா பகுதிக்கு கடந்த புதன்கிழமையன்று வரச்சொன்னார்கள் .அதை உண்மையென்று நம்பிய ராகுல் அங்கு சென்றார் .அப்போது அங்கிருந்த பலர் சேர்ந்து கொண்டு ராகுலை தாக்கி கொலை செய்துள்ளார்கள் .மேலும் அந்த பிணத்தையும் அங்கயே தூக்கி போட்டுவிட்டு போய் விட்டார்கள் .
இந்த கொலை பற்றி கேள்விப்பட்ட அவரின் தாய் அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுலின் பிணத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு உடலில் எங்கும் காயமில்லையென்றும் ,அவரின் மண்ணீரல் மட்டும் சிதைக்கப்பட்டுள்ளதாகும் கூறினார்கள் .இதனால் ராகுலை கொலை செய்ததாக அந்த பெண்ணின் சகோரர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

“அவளை மறந்துடு இல்லேன்னா இறந்துடு” -தங்கையின் தோழனுக்கு நேர்ந்த கதி