‘டேய்! அந்த பொண்ணு தனியாத்தான் போயிட்டிருக்கா,தூக்குங்கடா ” -துப்பாக்கி முனையில் மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ..

 

‘டேய்! அந்த பொண்ணு  தனியாத்தான் போயிட்டிருக்கா,தூக்குங்கடா ” -துப்பாக்கி முனையில் மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்  ..

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரின் சைபாவ் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு 27 வயது பெண் கடைக்கு போய் விட்டு தனியாக சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக ஒரு காரில் வந்த ஐந்து பேர் குடிபோதையில் இருந்தனர் .அப்போது அவர்களில் ஒருவர் அந்த பெண்ணை பார்த்ததும்,”டேய் அந்த பொண்ணு தனியாத்தான் போயிட்டிருக்கா ,தூக்கிடலாமா ?” என்று கேட்க அதற்கு மற்றவர்கள் சரியென்று கூறியதும் அந்த பெண் அருகே காரை கொண்டு போய் குறுக்கே நிறுத்தினார்கள் .

‘டேய்! அந்த பொண்ணு  தனியாத்தான் போயிட்டிருக்கா,தூக்குங்கடா ” -துப்பாக்கி முனையில் மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்  ..
பிறகு அந்த பெண்ணிடம் சென்று விலாசம் கேட்பது போல ஒருவர் இறங்கி விசாரித்தும் ,அந்த பெண் நின்று அவர்களுக்கு விலாசத்தை விவரித்துக்கொண்டிருக்கும்போதே ,மற்ற நால்வரும் காரிலிருந்து இறங்கி அந்த பெண்ணை அலாக்காக தூக்கிக்கொண்டு போனார்கள் .பிறகு அந்த காரை ஒரு ஒதுக்குபுறமான பகுதியில் நிறுத்தினார்கள் .அப்போது அந்த பெண் சத்தம் போட்டு கத்தினார் ,உடனே அவர்களில் ஒருவன் துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணின் முகத்துக்கு நேரே காமித்து சத்தம் போட்டால் சுட்டு விடுவேன் என்று மிரட்டினான் .
உயிருக்கு பயந்த அந்த பெண் சத்தம் போடாமலிருந்தார் .அப்போது அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்து விட்டு, அந்த பெண்ணை அந்த காட்டிலேயே தனியே விட்டு விட்டு சென்று விட்டார்கள் .
பிறகு அந்த பெண் மெல்ல நடந்து சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி புகாரளித்தார் ,அந்த பெண்ணின் புகாரை பெற்ற போலீசார் அந்த பாலியல் குற்றாவாளிகளை தேடி வருகிறார்கள் .அதே பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னாள் இதே போல் ஒரு பெண்ணை ஆறு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளதால் அந்த பகுதியில் பெண்கள் தனியே போகவே பயப்படுகிறார்கள் .

‘டேய்! அந்த பொண்ணு  தனியாத்தான் போயிட்டிருக்கா,தூக்குங்கடா ” -துப்பாக்கி முனையில் மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்  ..
FIR (Photo: IANS)