‘ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்படும்’ : அதிமுக அமைச்சர் எச்சரிக்கை!

 

‘ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்படும்’ : அதிமுக அமைச்சர் எச்சரிக்கை!

ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

‘ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்படும்’ : அதிமுக அமைச்சர் எச்சரிக்கை!

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்து அவதூறு கருத்து கூறிய ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும். அமைச்சர் இறப்பில் அரசியல் லாபம் தேடும் ஸ்டாலின் செயல் கண்டிக்கத்தக்கது” என்றார்.

‘ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்படும்’ : அதிமுக அமைச்சர் எச்சரிக்கை!

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்த திரு. துரைக்கண்ணு அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போதும், அவர் சுயநினைவின்றி மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடியபோதும், மாற்றுக் கட்சியினரும்கூட அவர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்பதையே விரும்பினர். ஆனால், சொந்தக் கட்சிக்காரர்களான அ.தி.மு.க.வின் தலைமையோ, அமைச்சர் தரப்பிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி ரூபாயைத் திரும்பப் பெறுவதற்காக, அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்தது என்றும், பணத்திற்குத் தேவையான உத்தரவாதம் கிடைத்தபிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானது என்றும், அதிர்ச்சி தரும் செய்திகள் நாளேடுகளிலும் புலனாய்வுப் பத்திரிகைகளிலும் விரிவாக வெளியாகியுள்ளன என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.