நடிகை தீபிகா படுகோனுக்கு சம்மன்!

 

நடிகை தீபிகா படுகோனுக்கு சம்மன்!

போதை மருந்து பயன்படுத்தும் விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ள நிலையில் தற்போது நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளனர்.

போதை விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவாத் கூறிய விமர்சனம், மாநிலங்களவை வரை எதிரொலித்தது. மும்பையில் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக மத்திய அரசு அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், நடிகை தீபிகா படுகோனுக்கும் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடல் காரணமாக தீபிகா படுகோனின் மேனேஜரை விசாரணைக்கு ஆஜராக கூறினர்.

நடிகை தீபிகா படுகோனுக்கு சம்மன்!

இந்நிலையில் தற்போது நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளனர். விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அடுத்தடுத்து சிக்கும் திரை பிரபலங்களால் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.