100 நாள் வேலை திட்டத்தில் தீபிகா படுகோனே! மோசடியின் உச்சக்கட்டம்

 

100 நாள் வேலை திட்டத்தில் தீபிகா படுகோனே! மோசடியின் உச்சக்கட்டம்

100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடையாள அட்டையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே புகைப்படத்துடன் கூடிய போலி அடையாள அட்டை இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. அதாவது கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் போலியாக அடையாள அட்டை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதுபோன்ற அட்டைகளை உருவாக்கி முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

100 நாள் வேலை திட்டத்தில் தீபிகா படுகோனே! மோசடியின் உச்சக்கட்டம்

இந்நிலையில் ஜிர்னியா மாவட்டத்தில் பிப்பர்கெடா நாகா கிராமத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் புகைப்படம் அடங்கிய போலி அடையாள அட்டை உருவாக்கி மத்திய அரசு நிதி முறைகேடாக பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது.