தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து!

 

தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து!

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய வங்கதேச எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகள் பரிமாறி தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தீபாவளி பண்டிகை அனைவருக்கும் பிரகாசத்தையும், மகிழ்ச்சியையும் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளி பண்டிகை மக்கள் அனைவருக்கும் பிரகாசத்தையும் மகிழ்ச்சியையும் தரட்டும். நல்ல ஆரோக்கியத்துடன் அனைவரும் வளமாக வாழ தீபாவளி நல்வாழ்த்துகள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து!

அதேபோல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், “ஒளியின் மகத்தான திருவிழாவான தீபாவளி பண்டிகை நம் நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சியை தரட்டும். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் குடிமக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.