திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் எஸ்.பி.பிக்காக மோட்ச தீபம்!

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் எஸ்.பி.பிக்காக மோட்ச தீபம்!

மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்காக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் கடந்த 26 ஆம் தேதி, அரசு மரியாதையுடன், திருவள்ளூர் அருகே, தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் எஸ்.பி.பிக்காக மோட்ச தீபம்!

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் , பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடகர் மனோ , பாடகி சைலஜா ஆகியோர் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். முன்னதாக இசைஞானி இளையராஜ கடந்த மாதம் 26 ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தனது நண்பர் எஸ்பிபியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார்.