கோவை மாநகர காவல் ஆணையராக தீபக்.எம்.டமோர் பதவியேற்பு!

 

கோவை மாநகர காவல் ஆணையராக தீபக்.எம்.டமோர் பதவியேற்பு!

கோவை

கோவை மாநகர காவல் ஆணையராக தீபக்.எம்.டமோர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாநகர காவல் ஆணையராக இருந்து வந்த சுமித் சரண், தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளுக்கு பின், புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், உளவுத்துறை ஏடிஜிபியாக மாறுதல் செய்யப்பட்டார்.

கோவை மாநகர காவல் ஆணையராக தீபக்.எம்.டமோர் பதவியேற்பு!

இதனையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் பொறுப்பை, மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அமல்ராஜ் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில், புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட தீபக் எம். டமோர் இன்று அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்று கொண்டார்.

முன்னதாக இவர் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஆக பணிபுரிந்து வந்தார். மேலும், கடந்த 2016-17 ஆண்டில் கோவை சரக டிஜஜி ஆகவும் பணிபுரிந்துள்ளார். புதிய காவல் ஆணையர் தீபக் எம்.தாமோருக்கு, துணை காவல் ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.