மணப்பாறை அருகே மாவட்ட எல்லையில் குறைந்து காணப்பட்ட மக்கள்!

 

மணப்பாறை அருகே மாவட்ட எல்லையில் குறைந்து காணப்பட்ட மக்கள்!

திருச்சி :

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் இ – பாஸ் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் எண்ணிக்கை அதிக அளவில் சாலையில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்து சென்ற வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்பட்டது. ஊரடங்கில் வந்த வாகனங்களை போல் வாகனங்களின் எண்ணிக்கை இருந்தது. இதுமட்டுமின்றி திருச்சி மாவட்ட எல்லையிலும் – திண்டுக்கல் மாவட்டத்தின் தொடக்கத்திலும் பேருந்துகள் பயணிகளை இறக்கி விட்டாலும் கூட சிலபேர் மட்டுமே இருந்தனர். அதிக அளவிலான பயணிகள் கூட்டம் இல்லை. இதனால் ஒரு சில பேருந்துகள் மட்டுமே மாவட்ட எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் குறிப்பிட்ட நேருக்கு ஒருமுறை மட்டுமே ஒரு பேருந்து வந்து செல்கின்றது. இதுமட்டுமின்றி திருச்சி மாவட்ட எல்லையில் இறக்கி விடப்பபடும் பயணிகள் மற்றொரு பேருந்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர் பகுதிக்கு சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்தில் ஏறி திண்டுக்கல் செல்லும் நிலையும் உள்ளது.
இதனால் திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்ல வேண்டும் என்றாலும் கூட மக்கள் 3 பேருந்தில் மாறி செல்ல வேண்டிய நிலை இருப்பதால் வருத்தத்துடன் செல்லும் நிலையும் ஏற்பட்டது