நுரையீரல் தொற்று அதிகரிப்பு… பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் பின்னடைவு!

 

நுரையீரல் தொற்று அதிகரிப்பு… பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் பின்னடைவு!

பிரணாப் முகர்ஜி நுரையீரலில் தொற்று அதிகரித்துள்ளதன் மூலம் அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்துள்ளது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நுரையீரல் தொற்று அதிகரிப்பு… பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் பின்னடைவு!
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு டெல்லி ஆர்மி ரிசர்ச் அன்ட் ரெஃபரல் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதற்குள்ளாக அவருக்கு கொரோனாவும் உறுதியானது.

நுரையீரல் தொற்று அதிகரிப்பு… பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் பின்னடைவு!
அறுவைசிகிச்சைக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி கண் விழிக்காமலே இருந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் அறிவித்தனர். கோமாவுக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து எந்த முன்னேற்றமும் இன்றி வென்டிலேட்டர் உதவியுடன் அவர் உயிர் வாழ்ந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது. ஆனால், அவரது மகன் மட்டும் பிரணாப் முகர்ஜி உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது என்று கூறி வந்தார்.

நுரையீரல் தொற்று அதிகரிப்பு… பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் பின்னடைவு!
இந்த நிலையில் டெல்லி ராணுவ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை பின்னடைவைச் சந்தித்துள்ளது. அவருடைய நுரையீரலில் நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அவர் தொடர்ந்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை நிபுணர்கள் குழு கண்காணித்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.