பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து கருத்து கேட்க முடிவு : அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

 

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து கருத்து கேட்க முடிவு : அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என கல்வியாளர்கள் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலையை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கொரோனா சூழலில் மாணவர்கள் நலன் கருதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்த அறிவிப்புக்குப் பிறகே, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்த நிலையில் நேற்று சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் முதல்வருடன் அவசர ஆலோசனை நடைபெற்றது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து கருத்து கேட்க முடிவு : அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் , “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதா வேண்டாமா என கல்வியாளர்கள் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். கல்வியாளர்கள் , மருத்துவ வல்லுனர்கள் உடன் இரண்டு நாட்களில் ஆலோசனை நடத்தி 2 நாட்களில் முடிவெடுக்கப்படும். 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்துவதில் மாணவ – மாணவிகளிடையே இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது. மாணவர்களுடன் பாதுகாப்பு , உடல்நலன் முக்கியம் என முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது.நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.