கடன் தொல்லையால், மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

 

கடன் தொல்லையால், மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கோயமுத்தூர்

கோவையில் கடன் தொல்லை காரணமாக மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் போத்தனூர் அருகேயுள்ள குறிச்சி பகுதியை சேர்ந்தவர் குமார்(35). இவர் அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் வியாபாரத்திற்காக அவர் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் அதிகளவு கடன் பெற்றுள்ளார். ஆனால், வியாபாரம் சரியாக நடைபெறாததால் பணத்தை திறப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

கடன் தொல்லையால், மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் பணத்தை கொடுத்தவர்கள் அதனை திருப்பி கேட்டதால், குமார் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடன் பிரச்சினை காரணமாக நேற்று குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மயங்கிய நிலையில் கிடப்பதை கண்ட உறவினர்கள் உடனடியாக குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த போத்தனூர் காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.