கடன் தவணை செலுத்த நெருக்கடி… வேதனையில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை!

 

கடன் தவணை செலுத்த நெருக்கடி… வேதனையில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி

திருச்சி அருகே கடன் தவணை செலுத்தக்கோரி நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் பேரூர் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து. விவசாயி. இவர் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதந்தோறும் ரு.6 ஆயிரம் வீதம் தவணை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டதால் கடந்த 3 மாதங்களாக சரிவர தவணை செலுத்த வில்லை என கூறப்படுகிறது. இதனால், நிதி நிறுவனத்தினர் தவணை செலுத்தக்கோரி நெருக்கடி அளித்து வந்துள்ளனர்.

கடன் தவணை செலுத்த நெருக்கடி… வேதனையில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், நேற்று மருதமுத்துவின் வீட்டிற்கு சென்ற நிதி நிறுவன ஊழியர் தவணை தொகையை உடனடியாக செலத்தும்படி கூறியுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என்றும், 1 வாரத்தில் பணத்தை தருவதாக அவர் கூறியுள்ளார். ஆனால், நிதி நிறுவனத்தினர் உடனடியாக பணத்தை வழங்க கூறி வீட்டின் முன்பாக அமர்ந்துள்ளனர். இதனை அக்கம்பக்கத்தினர் கண்டதால் அவமானத்திற்குள்ளான மருதமுத்து, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறந்த ஜீயபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மருதமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மருதமுத்துவின் மனைவி அளித்த புகாரின் பேரில், ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.