என்.எல்.சி வெடி விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. உயிரிழப்பு அதிகரிக்கும் எனத் தகவல்!

 

என்.எல்.சி வெடி விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. உயிரிழப்பு அதிகரிக்கும் எனத் தகவல்!

தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்குத் திரும்பிய நிலையில், திடீரென 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

என்.எல்.சி வெடி விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. உயிரிழப்பு அதிகரிக்கும் எனத் தகவல்!

 

சமீபத்தில் 6 ஆவது யூனிட்டில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், இன்று 5 ஆவது யூனிட்டில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 17 ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊழியர்கள் பலர் விபத்தில் சிக்கி இருப்பதால் உயிரிழப்புகள் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகிறது. இது போன்ற விபத்துகள் தொடர்வதால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.