பாகிஸ்தான் அடுக்கு மாடி கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

 

பாகிஸ்தான் அடுக்கு மாடி கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

கராச்சி: பாகிஸ்தானில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

கராச்சியின் லியாரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது. 6 மாடிகள் கொண்ட அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததும், மின் தடை ஏற்பட்டதால் மீட்பு நடவடிக்கைகள் கடினமாகியது.

இதுவரை நான்கு பெண்கள் உட்பட 13 பேரின் சடலங்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர். 24 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட ஒருவர், மருத்துவமனையில் இறந்தார். இராணுவம், ரேஞ்சர்ஸ், போலீஸ் போன்ற பணியாளர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

லியாரியின் லியாகத் காலனியில் அமைந்திருந்த இந்த கட்டிடத்தில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மேல் மாடியில் ஒரு பென்ட்ஹவுஸ் ஆகியவை இருந்தன. இரண்டு மாதங்களுக்கு முன்னரே இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.