“பேஸ்புக்கில் கொலை மிரட்டல்”- விசிக நிர்வாகி மீது சேலம் ஆட்சியரிடம் புகார்

 

“பேஸ்புக்கில் கொலை மிரட்டல்”- விசிக நிர்வாகி மீது சேலம் ஆட்சியரிடம் புகார்

சேலம்

சமூக வலைதளத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வேலூர் இப்ராஹிம் புகார் அளித்தார்.

தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் அமைப்பின் தலைவராக உள்ளவர் வேலூர் இப்ராஹிம். இவர் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில், தான் மத்திய, மாநில அரசுகளின் நல திட்டங்களை மக்களுக்கு எடுத்துக்கூறும் விதமாக, மாநிலம் முழுவதும் மத நல்லிணக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

“பேஸ்புக்கில் கொலை மிரட்டல்”- விசிக நிர்வாகி மீது சேலம் ஆட்சியரிடம் புகார்

இதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி காஜாமைதீன் என்பவர், அவரது பேஸ்புக் பக்கத்தில், தன்னை குறித்து அவதூறான செய்திகளை பதிவிட்டு உள்ளதுடன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்தும் உள்ளதாக கூறினார். எனவே, காஜாமைதீன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் வேண்டுகோள் விடுத்துளளார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ராமன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர் புறப்பட்டு சென்றார்.