நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மறைவு: ப.சிதம்பரம் இரங்கல்!

 

நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மறைவு: ப.சிதம்பரம் இரங்கல்!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் (78 ) காலமானார். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் லட்சுமணன் உயிரிழந்துள்ளார்.

நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மறைவு: ப.சிதம்பரம் இரங்கல்!

சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இருந்துள்ள இவர் மாசு கட்டுபாடு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வழக்கு ஒன்றில் பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து உத்தரவிட்டவர்.

இந்நிலையில் முன்னாள் நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “தமிழ்நாட்டுக்கும் சிவகங்கை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி திரு ஏ. ஆர். லக்ஷ்மணன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.