தந்தை மகன் ஜெயலில் மரணம்… பாரபட்சமின்றி நடவடிக்கை! – அமைச்சர் உறுதி
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சிறையில் மர்மமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மர்ம மரணத்தைக் கண்டித்து சாத்தான்குளத்தில் வணிகர்கள், பொது மக்கள் போராட்டத்தில் குதித்தனர். முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
சாத்தான்குளத்தில் காவல்துறை அழைத்துச் சென்ற ஜெயராஜ் அவரது மகன் பென்னீக்ஸ் இருவருமே இறந்துவிட்டார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா?
உள்துறையைக் கையில் வைத்திருக்கும் @CMOTamilNadu பதிலளிக்க வேண்டும்; உரிய நீதியும் வேண்டும்! pic.twitter.com/LF1Q9Raudh
— M.K.Stalin (@mkstalin) June 23, 2020
இது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயிலில் இறந்த சம்பவத்தில் யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.