திவ்யானந்த மஹராஜ் சுவாமி மறைவு: முதல்வர் இரங்கல்!

 

திவ்யானந்த மஹராஜ் சுவாமி மறைவு: முதல்வர் இரங்கல்!

திவ்யானந்த மஹராஜ் சுவாமிகள் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருச்சி, திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர் சுவாமி திவ்யானந்த மஹராஜ். இவர் சேரன்மகாதேவி பரத்வாஜ ஆசிரமம் மற்றும் திசையன்விளை, ராணிப்பேட்டை ராமகிருஷ்ண பள்ளிகளில் பொறுப்பாளராக இருந்து வந்தார். அதுமட்டுமில்லாமல், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் செயலராகவும் பணியாற்றினார்.

திவ்யானந்த மஹராஜ் சுவாமி மறைவு: முதல்வர் இரங்கல்!

கடந்த சில மாதங்களாக, உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த திவ்யானந்த மஹராஜ் நேற்று இரவு காலமானார். அவரது இறுதிச் சடங்கு திருப்பராய்த்துறையில் நடைபெற்றது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமியும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணித்தவர் திவ்யானந்த மஹராஜ் சுவாமிகள் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.