“கண்ணை குருடாக்கி , பெண்ணை தூக்கிட்டிங்களே “-காது கேட்காத பெண்ணுக்கு காட்டுக்குள் நடந்த விபரீதம்.

 

“கண்ணை குருடாக்கி , பெண்ணை தூக்கிட்டிங்களே “-காது கேட்காத பெண்ணுக்கு காட்டுக்குள் நடந்த விபரீதம்.

ஒரு வாய் பேச முடியாத ,காது கேட்காத பெண்ணின் கண்களையும் குருடாக்கிவிட்டு பலாத்காரம் செய்த மூவரை போலீசார் கைது செய்தார்கள் .

“கண்ணை குருடாக்கி , பெண்ணை தூக்கிட்டிங்களே “-காது கேட்காத பெண்ணுக்கு காட்டுக்குள் நடந்த விபரீதம்.

பீகாரின் மதுபனி மாவட்டத்தில்  உள்ள கவாஹா பார்ஹி கிராமத்தில் ஒரு 15 வயதான பெண் காது கேக்காமல், வாய் பேச முடியாமல் இருந்தார் .அந்த பெண் வயிற்று பிழைப்புக்கு ஆடு மேய்த்து வந்தார்.அதனால் அந்த பெண்ணை அந்த பகுதியில் வசிக்கும் சில வாலிபர்கள்  நோட்டமிட்டனர் .அவர் தனியாக காட்டு பகுதிக்கு போவதையும் ,அங்கு ஆடுகளை மேய்த்துவிட்டு இரவு நேரத்தில் தனியாக வருவதையும் கவனித்த அவர்கள்  அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய திட்டமிட்டார்கள் .அவர்களின் திட்டப்படி கடந்த செவ்வாய்க்கிழமையன்று அந்த பெண் ஆடுகளை மேய்த்து விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் .அப்போது அந்த வாலிபர்கள் மூவர் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணை கட்டி அருகிலுள்ள ஒரு காட்டுக்கு தூக்கி சென்றார்கள் .அதன் பிறகு அவரை அந்த காட்டில் பலாத்காரம் செய்து விட்டார்கள் .,அதன் பிறகு அவர் தங்களை காமித்து கொடுத்து விடுவார் என்று பயந்தார்கள் .அதனால் அவரின் கண்களை குருடாக்கிவிட்டால், அவரால்  தங்களை காட்டி கொடுக்கமுடியாது என்று முடிவு செய்து அவரின் கண்கள் இரண்டையும் அங்குள்ள ஒரு இரும்பு கம்பியால் குத்தி விட்டு,அவரை  ரத்த வெள்ளத்தில் விட்டு விட்டு ஓடி விட்டார்கள் .

அதன் பிறகு அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .அங்கு அவரின் கண்களுக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள் .இருந்தாலும் அவருக்கு கண் பார்வை கிடைக்குமா என்று சந்தேகப்படுகிறர்கள் .இதற்கிடையே இந்த பலாத்கார வழக்கு பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த பகுதியை சேர்ந்த மூவரை கைது செய்தார்கள் .

“கண்ணை குருடாக்கி , பெண்ணை தூக்கிட்டிங்களே “-காது கேட்காத பெண்ணுக்கு காட்டுக்குள் நடந்த விபரீதம்.