அனுமதியில்லை… நம்பர் பிளேட் இல்லை… சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி!

 

அனுமதியில்லை… நம்பர் பிளேட் இல்லை… சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகள் சங்கத்திற்கும் மத்திய அரசுக்கும் 12 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை. மத்திய அரசு சட்டங்களை வாபஸ் பெற மாட்டோம் என தோளை உயர்த்த, வாபஸ் பெறாவிட்டால் நாங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம் என விவசாயிகள் சூளுரைக்கின்றனர். இதனால் அனைத்து கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன.

அனுமதியில்லை… நம்பர் பிளேட் இல்லை… சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி!

இதனிடையே வேளாண் சட்டங்களைத் தற்காலிக நடைமுறைப்படுத்த தடைவிதித்து உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. மேலும் மூன்று வேளாண் சட்டங்களையும் ஆய்வுசெய்யக் குழு அமைத்து ஆணையிட்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க போராட்டத்தைத் தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கம் முனைப்பு காட்டி வருகின்றன. இச்சூழலில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு டிராக்டர் ஓட்டி வந்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய ராகுல், விவசாயிகளின் சார்பில் அவர்களின் கருத்துக்களை நாடாளுமன்றத்துக்கு எடுத்துரைக்க டிராக்டரில் வந்துள்ளேன் என்றார்.

அனுமதியில்லை… நம்பர் பிளேட் இல்லை… சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி!

ராகுலின் இந்த நடவடிக்கைக்கு பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். தற்போது அனுமதியின்றி நாடாளுமன்றத்திற்கு டிராக்டர் ஓட்டி வந்ததாக ரன்தீப் சுர்ஜ்வாலா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீதும் டிராக்டர் மீதும் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவுசெய்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தை சுற்றிய பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டும் ஏன் டிராக்டரில் வந்தார்கள், அவர்கள் வந்த டிராக்டரில் ஏன் நம்பர் பிளேட் இல்லை என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.