கணவனுடன் விவாகரத்து… காதலனுடன் மகள் ஓட்டம்!- அவமானத்தால் பெற்றோர் தற்கொலை

 

கணவனுடன் விவாகரத்து… காதலனுடன் மகள் ஓட்டம்!- அவமானத்தால் பெற்றோர் தற்கொலை

கணவனிடம் விவாகரத்து பெற்ற நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்த மகள், காதலனுடன் ஓடிவிட்டார். இதனால் அவமானம் அடைந்த பெற்றோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே கோரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை ( 60). இவரது மனைவி பாக்கியம் (55). இந்த தம்பதிக்கு அலமேலு (32), சந்தியா (29), ரோசி (27) ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்களில் அலமேலு, சந்தியா ஆகியோருக்கு திருமணம் முடிந்து அதே கிராமத்தில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

கடைசி மகள் ரோசிக்கும், பள்ளிப்பட்டு தாலுகா ராஜாநகரம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார் ரோசி. இந்த சூழ்நிலையில், ரோசிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர ரோசியை கண்டித்துள்ளனர். இதனை காது கொடுத்து கேட்காத ரோசி, காதலுடன் பேசி வந்துள்ளார். கடந்த 10ம் தேதி பெற்றோருக்கு தெரியாமல் காதலுடன் ஓட்டம் பிடித்தார் ரோசி. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், விவாகரத்து பெற்று வீட்டில் இருந்த மகள், காதலனுடன் ஓடிவிட்டதால் அவமானம் தாங்க முடியாமல் தவித்த ஏழுமலை, அவருடைய மனைவி பாக்கியம் இருவரும் வீட்டில் உள்ள மின்விசிறிகளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்துவந்த பொதட்டூர்பேட்டை காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காதலர்களை தேடி வருகின்றனர்.