காதலனுடன் விஷம் குடித்த மகள்… வேதனையில் தாய், மகன் கிணற்றில் குதித்து தற்கொலை!

 

காதலனுடன் விஷம் குடித்த மகள்… வேதனையில் தாய், மகன் கிணற்றில் குதித்து தற்கொலை!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே காதலனுடன் மகள் தற்கொலைக்கு முயன்றதால், வேதனையில் தாய், மகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூரை அடுத்த மிண்டகிரி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் பெங்களூருவில் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், பிரியா(19), த்ரிஷா(17), விஷணு(13) ஆகிய 3 பிள்ளைகளும் உள்ளனர். பிரியா அதே பகுதியை சேர்ந்த திருப்பதி (19) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த, மகாலிங்கம் மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்து வந்தள்ளார்.

காதலனுடன் விஷம் குடித்த மகள்… வேதனையில் தாய், மகன் கிணற்றில் குதித்து தற்கொலை!

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பிரியாவும், திருப்பதியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். மயங்கி கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே, மகளின் செயலால் வேதனையடைந்த அம்சவேணி இளைய மகள் த்ரிஷா, மகன் விஷ்ணுவுடன் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், அம்சவேணியும், சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் உயிருக்கு போராடிய திரிஷாவை மீட்டு சிகிச்சைக்காக கிருணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து அம்சவேணி, விஷ்ணுவின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மாத்தூர் போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.