காதல் திருமணம் செய்த மகள்… வேதனையில் பெற்றோர் விஷம் சாப்பிட்டு தற்கொலை!

 

காதல் திருமணம் செய்த மகள்… வேதனையில் பெற்றோர் விஷம் சாப்பிட்டு தற்கொலை!

திருப்பூர்

மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் வேதனையில் பெற்றோர் விஷ மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பொளையம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயி. இவரது மனைவி சுமதி. இவர்களது மகள் ஜனனி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவர், வீட்டிற்கு தெரியாமல் காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து தனது பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம் செய்த மகள்… வேதனையில் பெற்றோர் விஷம் சாப்பிட்டு தற்கொலை!

இதனால் அதிர்ச்சியடைந்த பொன்னுசாமி – சுமதி தம்பதியினர், நேற்று இரவு வீட்டில் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீடு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டில் இருவரும் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், குன்னத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.