குடும்ப தகராறில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்!

 

குடும்ப தகராறில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்!

திருப்பூர்

திருப்பூரில் குடும்ப தகராறில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் திலகர் நகரை சேர்ந்தவர் ராமசாமி (65). இவரருக்கு மயங்காத்தாள், சகுந்தலா என இரு மனைவிகள் உள்ளனர். சகுந்தலாவிற்கு கார்த்தி, சரவணக்குமார் என 2 மகன்கள் உள்ளனர். சகுந்தலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இந்த நிலையில், கார்த்திக், அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மகள் பிருந்தாவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், கார்த்திக்கின் தம்பி சரவணகுமாரும், பிருந்தாவின் தங்கை லாவண்யாவும் காதலித்து வந்துள்ளனர்.

குடும்ப தகராறில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்!

திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா பேசாமல் இருந்துள்ளார். இதனால், சரவணகுமார் அவரை பேசும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இது லாவண்யாவின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதனை அடுத்து, அன்பழகன், அவரது மகன் சுஷாந்த் உள்ளிட்டோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ராமசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலைகலப்பாக மாறி உள்ளது.

அப்போது, பிருந்தா பிடித்து தள்ளியதில் கட்டிலில் மோதிகொண்ட மயங்காத்தால் படுகாயம் அடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மயங்காத்தால் உயிரிழந்தார். இதுகுறித்து, ராமசாமி 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் பிருந்தா, அவரது தந்தை அன்பழகன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.