வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமிக்கு ஹெச்ஐவி

 

வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமிக்கு ஹெச்ஐவி

வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமிக்கு ஹெச்.ஐ.வி உறுதியானது. அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராமமூர்த்தி என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வன்னிவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராம மூர்த்தி. கேரளாவில் வேலை செய்துவந்த இவர், அங்கு கணவனை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்துவந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்தார். அந்த இந்த விவகாரத்தினால் பெண்ணின் உறவினர்கள் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளனர். அதனால் ராமமூர்த்தி அஞ்சலியையும், இரண்டு பெண் பிள்ளைகளையும் சொந்த ஊரான வன்னிவேலம்பட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.

வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமிக்கு ஹெச்ஐவி

அதில் இரண்டாவது மகளான 13 வயது சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தில், அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதும், அவரது கர்ப்பத்திற்கு வளர்ப்பு தந்தையான ராமமூர்த்திதான் காரணம் என்பதும் தெரியவந்தது. விசாரணையில், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுமியை வலுக்கட்டாயமாக ராமமூர்த்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ராமமூர்த்தியை போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

கர்ப்பமான சிறுமியின் ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ந்து போன மருத்துவர்கள், ராமமூர்த்தி மற்றும் சிறுமியில் தாயின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தனர். அதில் அவர்களுக்கும் எய்ட்ஸ் இருப்பது உறுதியானது.