கொரோனாவில் மீண்ட சகோதரியைப் பார்த்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்த தங்கை… வைரல் வீடியோ!

 

கொரோனாவில் மீண்ட சகோதரியைப் பார்த்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்த தங்கை… வைரல் வீடியோ!

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தினாலும் பல நோயாளிகள் குணமடைந்து வருவதும் ஒரு பக்கம் ஆறுதல் தருகிறது.
கொரோனா சிகிச்சைக்காக மற்றும் தனிமைப்படுத்தும் முகாமிலும் தன் குடும்பத்தை பிரிந்து இருப்பவர்களின் வேதனையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. நோய் என்ற ஒன்று வந்துவிட்டால் மருந்தைவிட நம் அன்பானவர்களின் அரவணைப்பு தான் நம்மை காக்கக் கூடிய மிகப்பெரிய சக்தி.

கொரோனாவில் மீண்ட சகோதரியைப் பார்த்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்த தங்கை… வைரல் வீடியோ!
ஆனால் இந்தத் தொற்று ஏற்பட்டு விட்டால் தனிமைப்படுத்தப்படுவதே முதல் வேலை. எனவே தனக்கு அன்பானவர்களைப் பிரிந்து எத்தனை நாட்கள் இருக்கப் போகிறோமோ என்று தெரியாமல் இருக்கும் மனங்களின் வேதனையைச் சொல்லி மாளாது. அப்படி கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட தனது அன்பானவர்களைப் பார்க்கும்போது அவர்கள் மனதில் எழும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. அதுபோல் ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது.

கொரோனாவில் மீண்ட சகோதரியைப் பார்த்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்த தங்கை… வைரல் வீடியோ!
புனேவில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த தனது சகோதரியை பார்த்த தங்கையின் மகிழ்ச்சி தாங்க முடியாமல் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறார். அவரது உற்சாகத்தைக் காணும் போது அந்த தங்கை தனது சகோதரியை எந்த அளவிற்கு பிரிந்து வாடியிருப்பார் என்று நமக்கு தெரிகிறது. இந்த சகோதரிகளின் பாசப்பிணைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண் மகிழ்ச்சியில் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.