“மாட்டு கொட்டகையில் மாட்டிக்கொண்ட பெண்” -அண்ணனை பழிவாங்க தங்கையை கெடுத்த கூட்டம்

 

“மாட்டு கொட்டகையில் மாட்டிக்கொண்ட பெண்” -அண்ணனை பழிவாங்க தங்கையை கெடுத்த கூட்டம்

மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்ற ஒரு பெண்ணை, அங்கு ஒளிந்திருந்த சிலர் கெடுத்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு 19 வயது பெண்ணின் சகோதரருக்கும் அந்த ஊரிலுள்ள சந்தீப் என்ற நபருக்கும் பல வருடங்களாகவே பகை இருந்து வந்துள்ளது .அதனால் அந்த நபரை பழி வாங்க சந்தீப் என்ற நபர் சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தார் .


செப்டம்பர் 14ம் தேதியன்று அந்த சந்தீப்பின் எதிரியின் தங்கையான 19 வயது பெண் அவரின் மாட்டுக்கொட்டகையில் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைத்து கொண்டிருந்தார் .அப்போது அங்கு ஒளிந்து கொண்டிருந்த சந்தீப் மற்றும் அவரின் மூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை அந்த மாட்டுக்கொட்டகையியிலேயே ,மாடுகளுக்கு நடுவிலேயே பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டனர் .பிறகு அந்த பெண்ணை கொலை செய்ய முயன்ற போது,சிலர் அங்கு வந்ததையடுத்து அவர்கள் ஓடி விட்டனர் .
பிறகு அங்கு வந்த சிலர் அந்த பெண்ணை அங்குள்ள அலிகார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .பாதிக்கப்பட்ட அந்த பெண் ஒரு தலித் என்பதாலும் ,அந்த பெண்ணை கெடுத்தவர்கள் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதாலும் இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது .அங்குள்ள அரசியல் கட்சியினர் அந்த பெண்ணை மருத்துவமனையில் சந்தித்து விசாரித்து வரும்நிலையில் ,அந்த பெண்ணின் சகோதரர் போலீசில் இது தன்னுடைய பழைய பகையை தீர்த்துக்கொள்ள சில எதிரிகளின் சதி என்று கூறியுள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து ஒரே ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளனர் ,மேலும் மூவரை தேடி வருகிறார்கள்

“மாட்டு கொட்டகையில் மாட்டிக்கொண்ட பெண்” -அண்ணனை பழிவாங்க தங்கையை கெடுத்த கூட்டம்