“ஒருத்தன் கெடுத்ததை இன்னொருத்தன் படம் பிடிச்சான்” -பண்ணை வீட்டில் பல மாதம் நடந்த கொடுமை

 

“ஒருத்தன் கெடுத்ததை இன்னொருத்தன் படம் பிடிச்சான்” -பண்ணை வீட்டில் பல மாதம் நடந்த கொடுமை


ஒரு பண்ணை வீட்டில் ஒரு தலித் பெண்ணை பல மாதங்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த வாலிபரையும் அதை படம் பிடித்து ப்ளாக் மெயில் செய்தவரையும் போலீசார் கைது செய்தார்கள் .

“ஒருத்தன் கெடுத்ததை இன்னொருத்தன் படம் பிடிச்சான்” -பண்ணை வீட்டில் பல மாதம் நடந்த கொடுமை

உ.பி.யின் ஃபிரோசாபாத் மாவட்டத்தின் நக்ரி பகுதியில் 21 வயதான தலித் பெண்ணொருவர் அங்குள்ள ஒரு பண்ணையாரிடம் வேலை பார்த்து வருகிறார் .இந்நிலையில் அந்த பெண் வேலை செய்யும் பக்கத்து வயலுக்கு சொந்தக்கார 28 வயதான ஒரு வாலிபருக்கு அந்த பெண் மீது மோகம் பிறந்தது .அதனால் அவரை அடைய அவரை திட்டமிட்டார் .மேலும் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருந்தார் .
அதன் படி கடந்த வரம் அந்த பெண் தனியாக ஒரு வயல்வெளியில் இருந்தார் .அப்போது அங்கு வந்த அந்த பக்கத்து பண்ணையை சேர்ந்த வாலிபர் அந்த பெண்ணிடம்,’ சில வேலைகள் தங்கள் நிலத்தில் இருப்பதாகவும் அதற்கு தனியாக சம்பளம் கொடுத்து விடுவதாகவும்’ கூறி அழைத்து சென்றார் .பின்னர் அவரின் பேச்சை நம்பி அந்த பெண் அந்த நிலத்திற்கு சென்றார் .அங்கு அந்த வாலிபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் .அப்போது தன்னுடைய நண்பரை வரவைத்து அந்த காட்சியை வீடியோவும் எடுத்தார் .
அதன் பின்னர் அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் அந்த வீடியோவை காமித்து அதை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாகவும், உள்ளூரில் உள்ளோரிடமும அதை காண்பிப்பதாக மிரட்டி பல மாதங்கள் அந்த பெண்ணை அந்த பண்ணை வீட்டிற்கு வரவைத்து பலாத்காரம் செய்துள்ளார் .
ஒரு கட்டத்திற்கு மேல் அவரின் கொடுமை பொறுக்க முடியாத அந்த பெண் அவர் கூப்பிட்டு போக மறுத்தார் .அதனால் அந்த வாலிபர்கள் அந்த வீடியோவை ஊடகத்தில் வெளியிட்டார்கள் ,இதனால் அந்த பெண் போலீசில், அந்த வாலிபர்கள் இருவர் மீதும் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“ஒருத்தன் கெடுத்ததை இன்னொருத்தன் படம் பிடிச்சான்” -பண்ணை வீட்டில் பல மாதம் நடந்த கொடுமை