டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் நீக்கம்!

 

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் நீக்கம்!

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த மஹாஸ்வேதா தேவியின் “திரௌபதி”, பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் நீக்கம்!

இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் நீக்கப்பட்டுள்ளன.எழுத்தாளர்கள் பாமா ,சுகிர்தராணியின் படைப்புகள் பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக்குப் பின் நீக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத் துறையில் பாடப் பிரிவில் இருந்து தமிழ் எழுத்தாளர்கள் படைப்பு நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. ஆங்கிலத் துறையில் சேர்ந்த பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே இரவோடிரவாக படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது.நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதில் சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது