அப்பா இன்று வீடு திரும்புகிறார் : நடிகை வரலட்சுமி உருக்கம்!

 

அப்பா இன்று வீடு   திரும்புகிறார் : நடிகை வரலட்சுமி உருக்கம்!

நடிகர் சரத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் வீடு திரும்புவதாக அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அப்பா இன்று வீடு   திரும்புகிறார் : நடிகை வரலட்சுமி உருக்கம்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பா இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார். இருப்பினும் அவர் 10 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அப்பா இன்று வீடு   திரும்புகிறார் : நடிகை வரலட்சுமி உருக்கம்!

இந்த நேரத்தில் மருத்துவர்கள், முன்கள பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர்களுடைய அர்பணிப்பான பணி, என் தந்தை குணமடைந்து நல்ல உடல்நலத்துக்கு திரும்ப உதவியாக இருந்தது.

அவர் உடல்நலம் தேற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.
கொரோனா இன்னமும் ஆபத்தானதுதான் . நாம் பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவேண்டும். நம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் பாதிக்கப்படும் போது தான் அது எத்தனை ஆபத்தானது என்பது தெரிகிறது ” என்று குறிப்பிட்டுள்ளார்.