விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட தந்தை -மகன் : அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட தந்தை -மகன் : அதிர்ச்சி தரும் சம்பவம்!

கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி போய் உள்ளனர். இதனால் பல குடும்பங்கள் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் அதேவேளையில் பல குடும்பங்கள் குற்ற சம்பவங்களால் அழிந்து வருகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேல்நிலைப் பட்டியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். 54 வயதான இவருக்கு அருண்குமார் என்ற மகன் உள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட தந்தை -மகன் : அதிர்ச்சி தரும் சம்பவம்!

இந்நிலையில் நேற்று தந்தை பாலச்சந்திரன் மற்றும் மகன் அருண்குமார் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து உறவினர்கள் போலீசுக்கு தகவல் தர தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பந்தமாக இன்னும் எந்த தெளிவான தகவலும் வெளியாகவில்லை.

விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட தந்தை -மகன் : அதிர்ச்சி தரும் சம்பவம்!

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக தந்தை மகன் இருவரும் விஷமருந்தி இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.