தேனு இல்ல சர்க்கரை பாகு! கலப்படமற்ற தேனுக்கான சோதனையில் சிக்கிய பதஞ்சலி!!

 

தேனு இல்ல சர்க்கரை பாகு! கலப்படமற்ற தேனுக்கான சோதனையில் சிக்கிய பதஞ்சலி!!

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய கலப்படமற்ற தேனுக்கான சோதனையில் பதஞ்சலி, டாபர், சாண்டு ப்யூர்( Zandu Pure) உள்ளிட்ட 10 நிறுவனங்களின் தயாரிப்புகள் தோல்வியை தழுவியுள்ளன.

சில பிரபலமான பிராண்டுகளால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் தேன் அசல் தூய்மைக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய சோதனையில், தேனுடன் செயற்கை சர்க்கரை பாகை கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உயர் விலையுடன் விற்பனை செய்யப்பட்டுவரும் தேன், சர்க்கரையுடன் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து சி.எஸ்.இ உணவு அதிகாரிகள், பிரபல தேன் விற்பனை செய்யும் நிறுவனங்கள் விற்பனை செய்யும் தேனை ஆய்வு செய்தனர். டாபர், பதஞ்சலி, பைத்யநாத் மற்றும் ஜண்டு உள்ளிட்ட 13 முன்னணி பிராண்டுகளின் மூல மற்றும் பதப்படுத்தப்பட்ட தேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் பதஞ்சலி, டாபர், சாண்டு ப்யூர்( Zandu Pure) உள்ளிட்ட 10 நிறுவனங்கள் தயாரிக்கும் தேனில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவற்றில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை பாகுகள் கலந்திருப்பதாக சிஎஸ்இயின் உணவு பாதுகாப்பு மற்றும் நச்சு குழுவின் திட்ட இயக்குனர் அமித் குரானா தெரிவித்தார். தேன் பொதுவாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய ஒரு பொருள். ஆனால் அதனுடன் சர்க்கரை சேர்ந்தால் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.