தா.பாண்டியன் உடல் நாளை நல்லடக்கம்!

 

தா.பாண்டியன் உடல் நாளை நல்லடக்கம்!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நாளை மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 89. வயது மூப்பால் சிகிச்சை பெற்று வந்த தா. பாண்டியனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனா நோயிலிருந்து மீண்ட தா.பாண்டியன் சிறுநீரகத் தொற்று, சிறுநீரக செயலிழப்பு காரணமாக நேற்று முன்தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்.

தா.பாண்டியன் உடல் நாளை நல்லடக்கம்!

தா.பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பன்முக ஆற்றலாளராக அரசியல் களத்தில் திகழ்ந்த இவரது மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில், தா.பாண்டியன் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டி வெள்ளைமலைப்பட்டியில் நாளை மதியம் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரில் இருக்கும் அவரது இல்லத்தில் இன்று மதியம் ஒரு 1 மணி வரை தா.பாண்டியன் உடல் வைக்கப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தி.நகரில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் 2 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.