சென்னை அருகே 24 மணிநேரத்தில் உருவாகும் நிவர் புயல் : கனமழை எச்சரிக்கை!
Nov 23, 2020, 07:45 IST1606097731000
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும்.
தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 740 கிலோமீட்டர் , புதுச்சேரியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது நிவர் புயல்.
வங்க கடலில் புயல் உருவாகி உள்ளதால் தமிழகம்,புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ராமநாதபுரம், நாகை ,புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.நிவர் புயலின் தாக்கத்தினால் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.