மும்பையில் அலர்ட்: நிசர்கா புயல் நாளை மும்பையில் கரையை கடக்கிறது

 

மும்பையில் அலர்ட்: நிசர்கா புயல் நாளை மும்பையில் கரையை கடக்கிறது

மும்பை: அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல் நாளை கரையை கடக்கிறது.

தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாறியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு நிசர்கா புயல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த புயல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதால் இவ்விரு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் அலர்ட்: நிசர்கா புயல் நாளை மும்பையில் கரையை கடக்கிறது

இந்நிலையில், நிசர்கா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. நாளை மும்பை அருகில் இந்தப் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஜூன் 5-ஆம் தேதி வரை அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.