கரையை கடக்கிறது நிசர்கா புயல்: மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை!

 

கரையை கடக்கிறது நிசர்கா புயல்: மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை!

தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வனிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன் படி நிசர்கா என்று பெயரிடப்பட்ட இந்த புயலானது, தீவிர புயலாக மாறி மும்பையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 215 கிலோ மீட்டர் தொலைவிலும் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 440 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. வடகிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த புயல், மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

கரையை கடக்கிறது நிசர்கா புயல்: மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை!

இந்நிலையில் அதிதீவிர புயலான நிசர்கா, மகாராஷ்டிரா கடற்கரை பகுதியில் கரையை கடக்க தொடங்கியது; அடுத்த 3 மணி நேரம் வரை கரையை கடக்கும் நிகழ்வு நீடிக்கும் என்றும் புயலின் கண் பகுதி மகாராஷ்டிரா கடற்கரையை நெருங்கியுள்ளது. வடகிழக்கு திசையில் 19 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்கிறது. இதனால் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது

கரையை கடக்கிறது நிசர்கா புயல்: மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை!

முன்னதாக கடலோர மாவட்டங்களான ராய்காட், ரத்தினகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 15,000 பேர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.