சைபர் செக்‌ஸ் அடிக்‌ஷன்… மகிழ்ச்சியான தாம்பத்தியத்துக்கு இதை செய்யாதீர்கள்!

 

சைபர் செக்‌ஸ் அடிக்‌ஷன்… மகிழ்ச்சியான தாம்பத்தியத்துக்கு இதை செய்யாதீர்கள்!

கடந்த நூற்றாண்டின் முடிவு வரை பாலியல் ரீதியான புத்தகங்கள் மிகவும் ரகசியமாக வெளியாகின. அதை வாங்குபவர்கள் எண்ணிக்கையும் குறைவு. ஆசை இருந்தாலும் அதை வெளிப்படையாக வாங்குவதில் தயக்கம் இருந்து வந்தது.

1990களின் தொடக்கத்தில் மேலை நாடுகளில் இணையம் அறிமுகம் ஆனது.  இந்தியாவிலும் இணையம் வந்துவிட்டது. அதன் பிறகு பாலியல் ரீதியான இணையதளங்கள் புற்றீசல் போல கிளம்பிவிட்டன.

சைபர் செக்‌ஸ் அடிக்‌ஷன்… மகிழ்ச்சியான தாம்பத்தியத்துக்கு இதை செய்யாதீர்கள்!

அதுவரை பாலியல் ரீதியான புத்தகங்கள் வாங்குவதை கவுரவக் குறைச்சல் என்று ஒதுக்கியவர்களின் வீட்டுக்குள்ளேயே பாலியல் தளங்கள் வரவே, அதுவரை இருந்த தடைகள் மறைந்துவிட்டன.

ஆன்லைன் பாலியல் தளங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லும் தம்பதிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக பாலியல் மருத்துவத் துறை நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

40 லட்சத்துக்கும் அதிகமான பாலியல் இணையதளங்கள் உள்ளதாம். அதாவது மொத்த இணையதளங்களில் 12 சதவிகிதம் இந்த பாலியல் இணையதளங்கள் ஆக்கிரமித்துள்ளன. ஒரு நாளைக்கு 40 கோடி கோடி பேஜ் வீயூக்களை இந்த தளங்கள் ஈர்க்கின்றன.

வெறும் வீடியோ, புகைப்படம் மட்டும் இன்றி சேட்டிங் தளங்களும் அதிக அளவில் வந்துவிட்டன. இவை எல்லாம் தன் இணையர் உடன் தாம்பத்திய உறவு கொள்வதை விட இணையத்தில் திருப்தி அடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகிவிட்டது.

பாலியல் தளங்களே கதி என்று இருக்கும் ஆண்களுக்கு மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது விரைப்புத்தன்மை இன்மை, ஆர்வமின்மை போன்றவை ஏற்படுகிறது. இதனால், அவர்களால் முழுமையான தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை. இதன் காரணமாக தம்பதிகளுக்குள் பிரச்னைகள் வெடிக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சைபர் செக்ஸ் அடிக்‌ஷன் தவிர்க்க லேப்டாப், கம்ப்யூட்டரை முதலில் வீட்டில் பொதுவான இடத்தில், அனைவரும் பார்க்கும் வகையில் வைத்திடுங்கள்.

பேரன்டல் கண்ட்ரோல் சாஃப்ட்வேர் பயன்படுத்தி ஆபாச தளங்களை தடை செய்திடுங்கள்.

ஆன்லைன் செக்ஸ் காட்சிகளைப் பார்ப்பதற்கு பதில், மனைவியுடன் நேரத்தை செலவிடுங்கள். மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவிகள் செய்யுங்கள்.

முடியாதபட்சத்தில் மனநல ஆலோசகர்களை அணுகலாம். அவர்கள் இந்த போதையில் இருந்து விடுபட உதவுவார்கள்!