அதிமுக யாரை நம்பியும் இல்லை- சி.வி.சண்முகம்

 

அதிமுக யாரை நம்பியும் இல்லை- சி.வி.சண்முகம்

அதிமுக யாரை நம்பியும் இல்லை பாமகவுக்கு மறைமுகமாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக யாரை நம்பியும் இல்லை- சி.வி.சண்முகம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம், தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தேர்தல் பொறுப்பாளரும் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் மற்றொரு பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், “அதிமுக யாரை நம்பியும் இல்லை, தொண்டர்களை நம்பி உள்ளது. யாரும் பயப்பட வேண்டாம். தைரியமாக தேர்தல் பணி ஆற்றுங்கள். வெற்றி பெறலாம், நாற்பத்தி ஒன்பது ஆண்டு கடந்து 50வது ஆண்டை நோக்கி செல்லும் கட்சி அதிமுக. அதிமுக கூட்டணியிலிருந்து பாமக தனித்து போட்டி என்று நேற்று அறிவித்துள்ளனர். யாரை நம்பியும் அதிமுக இல்லை” எனக் கூறினார்.