பட்டாக்கத்தியால் ‘பர்த் டே’ கொண்டாட்டம் : அலேக்காக தூக்கிய போலீஸ்!

 

பட்டாக்கத்தியால் ‘பர்த் டே’ கொண்டாட்டம் : அலேக்காக தூக்கிய போலீஸ்!

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.

பட்டாக்கத்தியால் ‘பர்த் டே’ கொண்டாட்டம் : அலேக்காக தூக்கிய போலீஸ்!

பட்டாக்கத்தி, வாள் போன்றவற்றால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது தற்போது வாடிக்கையாகி உள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் இவற்றைத் தவிர்க்க தமிழக காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே போல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதி பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில் அவர் மன்னிப்பு கேட்டார்.

பட்டாக்கத்தியால் ‘பர்த் டே’ கொண்டாட்டம் : அலேக்காக தூக்கிய போலீஸ்!

இந்நிலையில் தூத்துக்குடி திரவியபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் தனது 19 ஆவது பிறந்தநாளை தனது நண்பர்களான ராஜா ,ஜெயகணேஷ் ,அஷ்டலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அப்போது கேக்கை வெட்ட பெரிய கத்தியை பயன்படுத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் ஆக வெளியிடப்பட்டது. தகவலறிந்த மாவட்ட காவல் ஆய்வாளர் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளரிடம் உடனடியாக விசாரணை மேற்கொண்டு கைது செய்ய உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, கேக் வெட்ட பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.