சாபம் போக்கும் சிவமந்திரம்!

 

சாபம் போக்கும் சிவமந்திரம்!

மாஹாலய பட்ச காலத்தில், சக்திக்கு உகந்தநாளான இன்று நாம் செய்த பாவங்களில் விடுபட ஓம் நமசிவாய மந்திரத்தை சொன்னால், தலைமுறை தலைமுறைத் தாண்டிய பாவங்கள் விலகும்.

சாபம் போக்கும் சிவமந்திரம்!


ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் காலமானது மஹாலய பட்ச காலமாகும். நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு வரும் காலம். இந்த காலகட்டத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவது உகந்ததாகும். இப்பொழுது, வேலை பளு, வேலையிழப்பு போன்றவற்றால் ஓடிக்கொண்டிருக்கும் நபர்களால் சரிவர முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. அப்படி உள்ளவர்களுக்காக, மஹாலய பட்ச காலத்தின் ஒன்பதாவது நாளான இன்று நம் முன்னோர்களை மனதில் நினைத்து, சக்திக்கு உகந்த நாளான இன்று ஓம் நமசிவயா மந்திரத்தை சொல்லலாம். நாம் முன்னோர்களுக்கு செய்யாமல் விட்ட காரியங்களின் பாவங்களிலிருந்து விடுபடலாம்.

சாபம் போக்கும் சிவமந்திரம்!


உலகிலே சக்தி வாய்ந்த மந்திரம் ஓம் நமசிவயாமாகும். அதே போல பல மடங்கு சக்தியை கொண்டதாக நம்முடைய 7 தலைமுறை சாபம், பாவங்களை நீக்குவதோடு, நம் பெற்றோர்கள், முன்னோர்களின் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவத்தை நீக்கக் கூடிய மிக சக்தி வாந்த சிவ மந்திரம்..
‘ ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா. ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நம சிவாய’.
இந்த மந்திரத்தை சிவப்பெருமானை மனமுருகி வேண்டி சிவன் கோயில்களில் அமர்ந்து ஒரே ஒரு முறை பாராயணம் செய்தால் கூட நாம் செய்த பாவங்கள் உடனே நீங்கும் சக்தி வாய்ந்தது.

  • வித்யா ராஜா