சீனப் படைகள் விரட்டியடிப்பு… கிழக்கு லடாக்கின் நடப்பது என்ன? மத்திய அரசு அரசு சொல்வது இதுதான்

 

சீனப் படைகள் விரட்டியடிப்பு… கிழக்கு லடாக்கின் நடப்பது என்ன?  மத்திய அரசு அரசு சொல்வது இதுதான்

அண்டை நாடுகளோடு எல்லை பிரச்சினைகள் இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், சீனாவுடன் 1960-களில் ஏற்பட்ட போருக்குப் பிறகு பெரிய அளவில் சிக்கல்கள் ஏதுமில்லை. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்தியா – சீனா எல்லையில் சில பிரச்சினைகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இதனால், சீன நாட்டின் 150-க்கும் மேற்பட்ட ஆப்களைத் தடை செய்தது மத்திய அரசு. இன்றைய நிலையில் கிழக்கு லடாக்கில் என்ன சூழல் இருக்கிறது என்பதை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பின் மூலம் விளக்குகிறது.

சீனப் படைகள் விரட்டியடிப்பு… கிழக்கு லடாக்கின் நடப்பது என்ன?  மத்திய அரசு அரசு சொல்வது இதுதான்

அந்தச் செய்திக்குறிப்பில், ‘எல்லைக் கட்டுப்பாட்டு  கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடவோ இந்திய  ராணுவம் முயற்சிக்கவில்லை.

ஆனால், சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல்,  பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ராணுவம், அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது.

சீனப் படைகள் விரட்டியடிப்பு… கிழக்கு லடாக்கின் நடப்பது என்ன?  மத்திய அரசு அரசு சொல்வது இதுதான்

சமீப நிகழ்வாக, 2020 செப்டம்பர் 07 ஆம் தேதி அன்று எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள நம்முடைய ராணுவ நிலைக்கு அருகில் வந்த சீனப்  படைகள் விரட்டியடிக்கப்பட்டன. நமது படைகளை அச்சுறுத்துவதற்காக சீன  ராணுவம் வானத்தை நோக்கி சுட்டது. ஆனால், இத்தகைய தூண்டி விடும்  போக்குக்கு இடையிலும், நமது படைகள் பொறுமை காத்து, பொறுப்புடன்  நடந்து கொண்டன.

அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ள அதே வேளையில், தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.