20% போனஸ் வழங்கக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா
Nov 9, 2020, 17:28 IST1604923094000
கடலூர்
தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத தீபாவளி போனஸை 20 சதவீதம் ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி, கடலூரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள்
தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் பணிமனையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பண்டிகைக் கால முன்பணத்தை உடனடியாக வழங்கவும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்கவும் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.