ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய ஆட்சியர்

 

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய ஆட்சியர்

உலக உணவு தினத்தையொட்டி, கடலூர் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய ஆட்சியர்

கடலூர் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி கலந்துகொண்டு, தனது இல்லத்தில் இருந்து கொண்டுவந்த உணவுகளை ஆதரவற்றவர்களுக்கு வழங்கினர். பின்னர், தொண்டு நிறுவனம் சார்பில் கொண்டுவரப்பட்ட உணவினை ஆதரவற்றவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும்
வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், கடலூர் மாவட்டத்தில் ஆதரவற்றவர்களுக்கு, மக்கள் தங்களால் முடிந்தவரை இல்லங்களில் சமைத்த உணவுகளை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய ஆட்சியர்